உள்ளூர் செய்திகள்
மதுபோதையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு
மதுபோதையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே ஆலங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் தங்கராசு( வயது 40). கூலித்தொழிலாளி. இவர் சேலம் சாலை ஸ்டேட் வங்கி எதிர் பகுதியில் மது போதையில் கீழே விழுந்து கிடந்தார்.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அவரை மீட்டு இவரை குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தபோது இவர் இறந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.