உள்ளூர் செய்திகள்
அண்ணாமலை

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜனதா வென்றால் 5 மந்திரி பதவி கிடைக்கும்- அண்ணாமலை

Published On 2022-04-15 08:49 GMT   |   Update On 2022-04-15 08:49 GMT
2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றால் தமிழ்நாட்டிற்கு 5 மத்திய மந்திரி பதவி கிடைக்கும். ரூ.50ஆயிரம் கோடி நிதியும் வர வைக்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
மாமல்லபுரம்:

கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க சார்பில் தமிழ் புத்தாண்டு விழா நடைபெற்றது. விழாவில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

விழாவில் அண்ணாமலை பேசியதாவது:- வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றால் தமிழ்நாட்டிற்கு 5 மத்திய மந்திரி பதவி கிடைக்கும். ரூ.50ஆயிரம் கோடி நிதியும் வர வைக்கப்படும். இதை மனதில் வைத்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், ஈரோடு பகுதியில் உள்ள சாதாரண ஏழை பா.ஜ.க தொண்டர்கள் செய்து வரும் கட்சி பணிகளை குறிப்பிட்டு பாராட்டியும் அண்ணாமலை பேசினார்.

Tags:    

Similar News