உள்ளூர் செய்திகள்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தேர்வு குறித்து மாணவர்கள் பயப்பட வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

Published On 2022-04-10 03:20 GMT   |   Update On 2022-04-10 03:20 GMT
மாணவர்கள் நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும் பொதுத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். 

அதே சமயம் கால அவகாசம் குறைவாக இருப்பதால், 10, 12-ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார்ப்படுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் தேர்வு குறித்து மாணவர்கள் பயப்பட வேண்டாம் என பல்விக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்-அமைச்சர் சொன்னது போல் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் படிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்ததை தேர்வில் நம்பிக்கையுடன் எழுதுங்கள்.

தேர்வு குறித்து மாணவர்கள் பயப்பட வேண்டாம். கொரோனா ஊரடங்கு காலத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு எழுதும் போது பதற்றமடையாமல் இருப்பதற்காகத் தான் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. எனவே மாணவர்கள் பொறுப்புடன் இப்பொழுதே படிக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News