உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (51). இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தங்கமணி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் தங்கமணி அடிக்கடி தனது மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தங்கமணியின் தாய் இறந்துவிட்டார். இதிலிருந்து தங்கமணி தனது மனைவி, மகளிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் வசந்தி தனது மகளுடன் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் தங்கமணி மட்டும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நீண்ட நேரமாகியும் தங்கமணி வீட்டு கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வசந்திக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வசந்தி தனது உறவினர்களுடன் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். பதில் ஏதும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டின் ஒரு அறையில் தங்கமணி தூக்குப்போட்டு கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தங்கமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாணிக்கம் பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (51). இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தங்கமணி பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் தங்கமணி அடிக்கடி தனது மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தங்கமணியின் தாய் இறந்துவிட்டார். இதிலிருந்து தங்கமணி தனது மனைவி, மகளிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் வசந்தி தனது மகளுடன் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் தங்கமணி மட்டும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நீண்ட நேரமாகியும் தங்கமணி வீட்டு கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து வசந்திக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வசந்தி தனது உறவினர்களுடன் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். பதில் ஏதும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டின் ஒரு அறையில் தங்கமணி தூக்குப்போட்டு கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தங்கமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.