உள்ளூர் செய்திகள்
சிறப்பு முகாம்.

பட்டா பிரச்சினைகளுக்கு சிறப்பு முகாம்

Published On 2022-03-19 15:17 IST   |   Update On 2022-03-19 15:17:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டத் திலுள்ள 10வட்டங்களுக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சி னைகளுக்கு தீர்வு காணும்வகையில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்துவது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது,

அதனடிப்படையில் அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் துனை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டது.

இதன்படி வருகிற 23.3.2022 மற்றும் 25.3.2022 அன்று கீழ்கண்டவாறு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அருப்புக்கோட்டை வட்டம்,  வதுவார்பட்டி கிராமத்தில் 23ந்தேதியும், குருணைக்குளம்  கிராமத்தில் 25ந்தேதியும், விருதுநகர் வட்டம்,  பி.குமாரலிங்கபுரம்  கிராமத்தில் 23ந்தேதியும், கோவில்வீரார்பட்டி கிராமத்தில் 25ந்தேதியும் முகாம்கள் நடக்கிறது. 

காரியாபட்டி வட்டம், எஸ்.கல்லுப்பட்டி கிராமத் தில் 23ந்தேதியும், சொக்க னேந்தல், சின்னஆலங்குளம், பெரிய ஆலங்குளம், கீழ் புதுப்பட்டி கிராமத்தில் 25ந்தேதியும், திருச்சுழி வட்டம்,  உடையனாம்பட்டி  கிராமத்தில்  23ந்தேதியும், வீரக்குடி கிராமத்தில் 25ந்தேதியும் முகாம்கள் நடக்கிறது. 

சாத்தூர் வட்டம்,  உப்பத்தூர், அய்யம் பட்டி கிராமத்தில் 23ந்தேதியும், சின்னகாமன்பட்டி  கிராமத்தில் 25ந்தேதியும், வெம்பக்கோட்டை வட்டம்,  அச்சங்குளம் கிராமத் தில் 23ந்தேதியும் ஊத்துப் பட்டியில் 25ந்தேதி முகாம்கள் நடக்கின்றன. 

இந்த சிறப்பு முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ளுமாறு விருதுநகர்மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். 


Similar News