உள்ளூர் செய்திகள்
விருதுநகர் அருகே இளம்பெண் மாயமானார்.
விருதுநகர்
காரியாபட்டி அருகே உள்ள அச்சம்பட்டியை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மனைவி ரேவதி.
இவர் அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர்களது மகள் கவிநயாஸ்ரீ (வயது19).
சம்பவத்தன்று வீட்டில் இருந்த கவிநயாஸ்ரீ தீடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.