உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மூதாட்டியிடம் நகை கொள்ளை

Published On 2022-03-17 14:49 IST   |   Update On 2022-03-17 14:49:00 IST
ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

அரியலூர்:

அரியலூர்  ஜெயங்கொண்டம் ஆண்டிமடம்  அருகே உள்ள அகினேஸ்புரம்  நடுத்தெருவை சேர்ந்தவர் பெரிய நாயகம்.  இவரது மனைவி நட்சத்திரமேரி வயது70. இவர் நேற்று மாலை 4 மணி அளவில் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென  நட்சத்திரமேரி காதில் அணிந் திருந்த கம்மல்  தோட்டை அறுத்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

அப்போது அவர்சத்தம் போடவே அருகில் இருந்தவர் கள் ஓடிவந்து  மூதாட்டியை மீட்டு ஆண்டிமடம்  அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து நட்சத்திரமேரி ஆண்டிமடம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர்குண சேகரன் வழக்கு பதிந்து மூதாட்டியிடம் நகை கொள்ளையில் ஈடுப்பட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்.

Similar News