உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுவை சட்டசபையில் இந்த ஆண்டு முழுமையான பட்ஜெட்- அன்பழகன் நம்பிக்கை

Published On 2022-03-11 14:21 IST   |   Update On 2022-03-11 14:21:00 IST
இந்த ஆண்டு புதுவை சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அன்பழகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: 

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் போலி மதசார்பின்மையை பேசும் கட்சிகளுக்கு சரியான பாடத்தை மக்கள் அளித்துள்ளார்கள். 

5 மாநிலத்தில் 4-ல் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. மீண்டும் தனது ஆட்சியை தக்க வைத்துள்ளது அக்கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும். பிரதமர் மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு புதுவை மாநில  அ.தி.மு.க. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

காங்கிரஸ் தனது தவறான செயல்பாட்டினால் பஞ்சாபில் ஆட்சியை இழந்து  உள்ளது. நாட்டின் பிரதான 2-வது தேசிய கட்சியான காங்கிரஸ் தனது தவறான செயல்பாட்டினால் மாநில கட்சியாக மாறுவது கவலைதரும் விஷயமாகும். 

புதுவையில் எதிர்வரும் பட்டெஜட் கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்டங்களுடன் முழுமையான பட்ஜெட்டை ரங்கசாமி அறிவிப்பார். பட்ஜெட்டுக்கு முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து உரிய ஆலோசனையை பெற்று சிறந்த ஒரு பட்ஜெட்டை அளிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News