உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

விஷம் குடித்து பெண் சாவு

Published On 2022-02-24 15:06 IST   |   Update On 2022-02-24 15:06:00 IST
வயிற்று வலி தாங்காமல் வீட்டில் இருந்த குருணை மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:

வயிற்று வலி தாங்காமல் வீட்டில் இருந்த குருணை மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பகவதியப்பன். இவரது மனைவி லட்சுமி (54). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். 

இதில் மகள் நந்தினியை (32) கொங்கர்பாளையத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா என்பவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக நந்தினிக்கு வயிற்று வலி இருந்து வந்ததாகவும், இதனால் நந்தினி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்து ள்ளதாக கூறப்படுகிறது.

 சம்பவத்தன்று அதிகாலை கார்த்திக்ராஜா வீட்டில் இருந்து வெளியே கடைக்கு சென்றிருந்தார். 

அப்போது நந்தினிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்காமல்  நந்தினி வீட்டில் இருந்த குருணை மருந்தை (விஷம்) குடித்துள்ளார்.

தகவலறிந்து வந்த கார்த்திக்ராஜா அருகில் இருந்தவர் களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக நந்தினியை சேர்த்தார்.

அதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News