உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுச்சேரியில் தனித்தனி விபத்தில் 7 பேர் காயம்

Published On 2022-02-23 10:00 IST   |   Update On 2022-02-23 10:00:00 IST
புதுவையில் தனித்தனி விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே மங்கலம் ஏரிக்கரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது  மனைவி விஜயா (வயது22).

தனது 2 வயது குழந்தை தஷிதாவுடன் உறவினர் ராமாயி(23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ராமாயி ஓட்டி வந்தார். விஜயா தனது குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பின்னால் அமர்ந்து வந்தார்.

புதுவை&விழுப்புரம் ரோட்டில் மூலக்குளத்தில் உள்ள தனியார் கார் ஷோரூம் அருகே வந்த போது பின்னால் வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் ராமாயி, விஜயா மற்றும் அவரது குழந்தை தஷிதா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். 

உடனே அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆட்டோவில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு விஜயா மற்றும் அவரது குழந்தை சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ராமாயி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியாங்குப்பம் ஆர்.கே.நகரை சேர்ந்தவர் கண்ணையன்(70). இவரது மனைவி சாந்தி(60). இவர் 
நெல்லித்தோப்பு மீன் மார்க் கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.

மீன் வியாபாரம் செய்வதற்காக சாந்தி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து நெல்லித்தோப்பு மார்க்கெட்டுக்கு புறப்பட்டு வந்தார். நயினார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகே வந்த போது பெண் ஒருவர் சைக்கிளில் திடீரென சாலையின் குறுக்கே  சென்றதால் அவர் மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருக்க கண்ணையன் திடீர் பிரேக் போட்டார். 

இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் கண்ணையன் மற்றும் அவரது  மனைவி சாந்தி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சாந்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று  வருகிறார்.

திருக்கனூர் அருகே சோம்பட்டு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியண்ணன்(63). இவர் முருங்கப் பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

 இவர் முருங்கப்பாக்கத்தில் கடலூர்&புதுவை ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக பெரியண்ணன் மீது மோதியது. இதில் பெரியண்ணனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் பெரியண்ணனை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த 2 விபத்துகள் குறித்த புகாரின் பேரில் புதுவை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருமாம்பாக்கம் இந்திராநகரை சேர்ந்தவர் சரவணன். இவர் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரளா. 

இவர் தனது மகள் சாதனாவை(10) அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சாதனா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுமி சாதனா படுகாயமடைந்தாள். 

உடனே சரளா தனது மகளை மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுமி சாதனா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து  விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News