உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-02-23 09:54 IST   |   Update On 2022-02-23 09:54:00 IST
வில்லியனூர் அருகே மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே கோனேரிகுப்பம் சீனிவாசாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவர் புதுவை அரசு பொதுப்பணித்துறையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கஸ்தூரி பாய்(வயது61). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கஸ்தூரிபாய் கடந்த சில ஆண்டுகளாக நீரழிவு, ரத்த அழுத்தம் மற்றும் மூட்டுவலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகாததால் கஸ்தூரிபாய் விரக்தியில் இருந்து வந்தார்.

வைத்திலிங்கம் தனது மனைவிக்கு மருந்து-மாத்திரை வாங்கி வர வெளியே சென்றிருந்த வேளையில் திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த கஸ்தூரிபாய் வீட்டின் கழிவறைக்கு சென்று அங்குள்ள இரும்பு கம்பியில் துப்பட்டவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது கணவர் வைத்திலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News