உள்ளூர் செய்திகள்
முன் அனுமதி பெற்று கூட்டம் நடத்த வேண்டும்- கலெக்டர் தகவல்
வேட்பாளர்கள் கூட்டம் நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்.
அதன்படி, அரசியல் கட்சியினர் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்துவதற்கு 1,000 நபர்கள் அல்லது கூட்டம் நடக்கும் இடங்களில் 50 சதவீதம் கொள்ளவுக்கு மிகாமல் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படும்.
முகக்கவசம் கட்டா யம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். கூட்டங்கள் நடைபெற உள்ள இடத்தை நேரடி ஆய்வு செய்த பின்பு அனுமதி வழங்கப்படும். அரங்குகளில் கட்சி கூட்டமோ, வேட்பாளர்கள் கூட்டமோ நடத்தினால் அதற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த சான்று பெற வேண்டும்.
இதற்கு அந்தந்த தேர்தல் பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதால் பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளவேண்டும்.
மேலும், அரசியல் கட்சி தொண்டர்கள், வேட்பாளர்கள் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்க 20 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர்.
எனவே அரசியல் கட்சியினர், போட்டியிடும் வேட்பாளர்கள் கொரோனா நோய் தொற்றின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்.
அதன்படி, அரசியல் கட்சியினர் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்துவதற்கு 1,000 நபர்கள் அல்லது கூட்டம் நடக்கும் இடங்களில் 50 சதவீதம் கொள்ளவுக்கு மிகாமல் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படும்.
முகக்கவசம் கட்டா யம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். கூட்டங்கள் நடைபெற உள்ள இடத்தை நேரடி ஆய்வு செய்த பின்பு அனுமதி வழங்கப்படும். அரங்குகளில் கட்சி கூட்டமோ, வேட்பாளர்கள் கூட்டமோ நடத்தினால் அதற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த சான்று பெற வேண்டும்.
இதற்கு அந்தந்த தேர்தல் பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதால் பொறுப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளவேண்டும்.
மேலும், அரசியல் கட்சி தொண்டர்கள், வேட்பாளர்கள் அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்க 20 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர்.
எனவே அரசியல் கட்சியினர், போட்டியிடும் வேட்பாளர்கள் கொரோனா நோய் தொற்றின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.