உள்ளூர் செய்திகள்
காளை விடும் விழாவில் மாடு முட்டி விவசாயி பலி
செய்யாறு அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி விவசாயி பலியானார்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 45) விவசாயி இவருக்கு திருமணமாகி தங்கம் என்ற மனைவியும் நந்தினி, சிவரஞ்சனி என்ற மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் தை அமாவாசையை முன்னிட்டுபெருமாள் கோவில் திருவிழாவில் காளை விடும் விழா சுமார் நடைபெற்றது.
அந்த மாடு விடும் விழாவில் 10 காளைகள் பங்கேற்றன. ஒரு காளை திடீரென்று எதிர்பாராதவிதமாக விழாவில் கலந்துகொண்ட ரகுநாதனை கொம்புகளால் குத்தியது.
பலத்த காயம் ஏற்பட்ட ரகுநாதனை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.