உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலும் ஒன்று. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
வெளிநாட்டு பக்தர்கள் திருவண்ணாமலையில் தங்கி இருந்து தியானம் உள்ளிட்ட ஆன்மீக கோட்பாடுகளை கடைபிடிக்கின்றனர்.
அவர்களுக்கு எங்கும் கிடையாத ஏதோ ஒரு ஆனந்தம் இங்கு கிடைக்கிறது. அதனால்தான் ஆண்டு தோறும் திருவண்ணா மலையில் தங்கி செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அனைத்து பகுதியில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலை வந்து சாமி தரிசனம் செய்து கிரிவலம் சென்று வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பலர் திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி வெங்கடா சலபதி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபட்டு வருகின்றனர்.
நேற்றும் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் இசைக்கருவிகள் வாசித்து பஜனைகள் பாடி சென்றனர். ஒரு பக்தர் ஆஞ்சநேயர் வேடமணிந்து ஆடியபடி சென்றார்.அவர்களுடன் பெண் பக்தர்களும் சென்றனர்.
அப்போது இதனை கண்ட பக்தர்கள் சிலர் பாதயாத்திரை பக்தர்கள் வைத்து இருந்த உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.