உள்ளூர் செய்திகள்
ஆரணி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயி உடல் உறுப்புகள் தானம்
ஆரணி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயின் கல்லீரல் சென்னை குமரன் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள குடிசைக்கரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பழனி (வயது58). கடந்த 30-ந்தேதி ஆரணி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.
பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் பழனி அனுமதிக்கப்பட்டார். பின்னர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்த்தனர்
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவருக்கு மூளை சாவு ஏற்பட்டது.
இதையடுத்து உறவினர்கள் பழனியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
இதைத்தொடர்ந்து பழனியின் கல்லீரல் சென்னை குமரன் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவரது மகன் ரஞ்ஜித்குமார் பெரிய கொழப்பலூர் அரசு ஆண்கள் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மற்றொரு மகன் ரகுபதி விவசாயம் செய்து வருகிறார். தமிழ்செல்வி என்ற மகள் உள்ளார்.