உள்ளூர் செய்திகள்
தை அமாவாசையை முன்னிட்டு அய்யங் குளக்கரையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த காட்சி.

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Published On 2022-01-31 14:53 IST   |   Update On 2022-01-31 14:53:00 IST
திருவண்ணாமலையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அய்யங்குளக்கரையில் பொதுமக்கள் குவிந்தனர்.
திருவண்ணாமலை:

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலை அய்யங் குளக்கரையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். 

இந்த ஆண்டுக்கான தை அமாவாசை தினம் இன்று என்பதால் ஏராளமான பொதுமக்கள்  அய்யங்குளக் கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதையொட்டி 10-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்களை சொல்லி முன்னோர் வழிபாடுகளை செய்தனர். 

இதனால் அந்தப் பகுதி திருவிழா கூட்டம் போல் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. முன்னோர் வழிபாட்டுக்கான பொருட்கள் அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டன. முன்னோர் வழிபாட்டை செய்தபின்னர் அதே பகுதியில் அமைந்துள்ள அருணகிரிநாதர் கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.

முன்னோர் வழிபாடு செய்த பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலிலும் தரிசனம் செய்தனர். தங்களது முன்னோர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காகவும், தங்களது குடும்பத்தில் அமை தியான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதற்காகவும் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதாக கூறப்படுகிறது.

Similar News