உள்ளூர் செய்திகள்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்ற போது எடுத்த படம்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்பு

Published On 2022-01-31 14:50 IST   |   Update On 2022-01-31 14:50:00 IST
கண்ணமங்கலம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஒழிப்பு தினம் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தொழுநோய் ஒழிப்பு தினம் நடைபெற்றது.
 
திருவண்ணாமலை மருத்துவ பணிகள் (தொழுநோய்) துணை இயக்குனர் டாக்டர் கார்த்திக் தலைமை தாங்கி, காந்தியடிகள் மறைந்த நாளை உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுவது குறித்தும், தொழுநோய் பாதித்தவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் விளக்கிக் கூறினார். டாக்டர் அனிலாராஜ் வரவேற்று பேசினார். 

தொழுநோய் பாதித்த பெண்ணுக்கு இலவச மருந்துகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து உலக தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் வேலாயுதம் நன்றி கூறினார்.

Similar News