உள்ளூர் செய்திகள்
சுவர் ஓவிய போட்டி: பேட்ரிக் பள்ளி முதலிடம்
உழவர்கரை நகராட்சி நடத்திய சுவர் ஓவிய போட்டியில் பேட்ரிக் பள்ளி முதலிடம் பிடித்தது.
புதுச்சேரி:
உழவர்கரை நகராட்சி சுவச் சர்வேஷன்-2022 சார்பில் (தூய்மையான நகரங்கள்) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் பேட்ரிக் பள்ளி மாணவர்கள் போஸ்டர்
பெயிண்டிங், சுவரோவியம், தெருக்கூத்து போட்டிகளில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு உழவர்கரை நகராட்சி ஆணையர் பரிசு வழங்கி பாராட்டினார்.
முதல் பரிசுக்குரிய சுவர் ஓவியத்தை பள்ளி தாளாளர் பிரெட்ரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, ஓவிய ஆசிரியர் சரவணகுமார் ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.
மேலும் சுவர் ஓவியம் வரைந்த மாணவர்கள் ஜித்தின் பிரகாஷ், தனுவர்ஷன், பூங்குழலி, சுபஸ்ரீ, ஜூடித் நிர்மலா, காவியா ஆகியேர் கவுரவிக்கப்பட்டனர்.