உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியை சேர்ந்த 2½ வயது குழந்தைக்கு அப்துல்கலாம் விருது
லீயாண்ட்ராவின் அதீத ஞாபக திறனை கண்டு வியந்த அப்துல் கலாம் உலக சாதனை நிறுவனம், அவரை பாராட்டும் விதமாக அப்துல்கலாம் விருது வழங்கி கவுரவித்தது.
புதுச்சேரி:
புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் தம்பதி நித்தீஸ்-ஆன்ஸின் ஜெனிஷா. இவர்களது மகள் லீயாண்ட்ரா (வயது 2½). இவள் சிறு வயதில் இருந்தே தமிழ், ஆங்கிலத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சிறுவர் பாடல்களை ஒப்புவித்தல், இந்தி எழுத்துகள் மற்றும் எண்களை கூறுவது, உடல் உறுப்புகள், மருத்துவ உபகரணங்களின் பெயர்களை படங்கள் மூலம் சரியாக சுட்டிக்காட்டுவது, சிறுகதைகளை ஆர்வமுடன் சொல்வது போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தாள்.
இந்த குழந்தையின் அதீத ஞாபக திறனை கண்டு வியந்த அப்துல் கலாம் உலக சாதனை நிறுவனம், லீயாண்ட்ராவை பாராட்டும் விதமாக அப்துல்கலாம் விருது வழங்கி கவுரவித்தது. சென்னையில் நடந்த அந்த நிறுவனத்தின் விழாவில் இந்த விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அந்த குழந்தையை விழாவில் கலந்துகொண்ட அனைவரும் பாராட்டினர்.
புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் தம்பதி நித்தீஸ்-ஆன்ஸின் ஜெனிஷா. இவர்களது மகள் லீயாண்ட்ரா (வயது 2½). இவள் சிறு வயதில் இருந்தே தமிழ், ஆங்கிலத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சிறுவர் பாடல்களை ஒப்புவித்தல், இந்தி எழுத்துகள் மற்றும் எண்களை கூறுவது, உடல் உறுப்புகள், மருத்துவ உபகரணங்களின் பெயர்களை படங்கள் மூலம் சரியாக சுட்டிக்காட்டுவது, சிறுகதைகளை ஆர்வமுடன் சொல்வது போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தாள்.
இந்த குழந்தையின் அதீத ஞாபக திறனை கண்டு வியந்த அப்துல் கலாம் உலக சாதனை நிறுவனம், லீயாண்ட்ராவை பாராட்டும் விதமாக அப்துல்கலாம் விருது வழங்கி கவுரவித்தது. சென்னையில் நடந்த அந்த நிறுவனத்தின் விழாவில் இந்த விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அந்த குழந்தையை விழாவில் கலந்துகொண்ட அனைவரும் பாராட்டினர்.