உள்ளூர் செய்திகள்
மாயம்

கணவருடன் புத்தாண்டு கொண்டாட வந்த பெண் மாயம்

Published On 2022-01-04 02:55 GMT   |   Update On 2022-01-04 02:55 GMT
கணவருடன் புத்தாண்டு கொண்டாட வந்த பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார்குப்பத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 30) மீனவர். இவரது மனைவி சந்திரா (28). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 31-ந் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அன்பரசன், தனது மனைவியுடன் புதுவைக்கு வந்தார். குழந்தைகளை அன்பரசனின் தாயார் அஞ்சலாட்சி பொறுப்பில் விட்டிருந்தனர்.

கணவன், மனைவி இருவரும் புதுவையில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். பின்னர் கடற்கரைக்கு வந்தனர். அப்போது, சந்திரா கடற்கரை அருகே உள்ள கழிவறைக்கு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் அன்பரசன் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சந்திராவை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News