உள்ளூர் செய்திகள்
மிரட்டல்

திருக்கனூர் அருகே காரை வழிமறித்து சாராயக்கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்

Published On 2022-01-03 13:50 GMT   |   Update On 2022-01-03 13:50 GMT
திருக்கனூர் அருகே காரை வழிமறித்து சாராயக்கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

திருக்கனூர் அருகே வாதானூர் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவர் சுத்துக்கேணியில் சாராயக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு பன்னீர் காரில் சாராயக்கடையை பார்வையிட சென்றார். கொடாத்தூர் அரசு தொடக்கப்பள்ளி அருகே சென்ற போது கொடாத்தூர் காலனியை சேர்ந்த கார்த்திக் உள்பட 4 பேர் குடிபோதையில் காரை வழிமறித்தனர்.

பன்னீர் காரை நிறுத்தியதும் கார்த்திக் உள்பட 4 பேரும் காரை விட்டு இறங்குமாறு பன்னீரை தகாத வார்த்தைகளால் திட்டினர். காரை விட்டு இறங்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் பயந்து போன பன்னீர் அங்கிருந்து காரை விரைவாக ஓட்டி சென்று விட்டார்.

பின்னர் இதுகுறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News