உள்ளூர் செய்திகள்
கிருமாம்பாக்கம் அருகே பாலத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி
கிருமாம்பாக்கம் அருகே பாலத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் அருகே மதிகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகணபதி (வயது 38). தச்சு தொழிலாளி. இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளகொரவள்ளிமேட்டில் உள்ள பாலத்தில் செல்வகணபதி தூங்கிக்கொண்டிருந்தார. அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் செல்வகணபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வகணபதி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.