உள்ளூர் செய்திகள்
15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 3-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி- புதுவை சுகாதாரத்துறை
புதுச்சேரியில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், 10-ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போட உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானின் பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி ஜனவரி 3-ந்தேதி முதல் போடப்படும். அதேபோல் ஜனவரி 10-ந் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி கடந்த 26-ந் தேதி அறிவித்தார்.
அதன்படி தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் செய்து வந்தன. இதுதொடர்பாக முன்பதிவு செய்து கொள்வது குறித்தும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் நலவழித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசின் சுகாதாரம் மற்றும் நலவழித்துறை சார்பில் வருகிற 3-ந் தேதியில் இருந்து 15 முதல் 18 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்-சிறுமிகளுக்கும் (அதாவது 2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களுக்கு) கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தப்பட உள்ளது.
தடுப்பூசி போட ஆன்லைன் அல்லது தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் முன்பதிவு செய்யலாம். இதற்காக கோவின் செயலி ஏற்கனவே உள்ள கணக்கு மூலம் சுயபதிவு செய்யலாம். அல்லது செல்போன் எண்ணை கொண்டு புதிய கணக்கை உருவாக்கியும் பதிவு செய்யலாம். நேரடியாக தடுப்பூசி போட செல்லும்போது அங்குள்ள சரி பார்ப்பவர்கள், தடுப்பூசி போடுபவர் மூலம் ஆன்சைட்டிலும் பதிவு செய்யலாம்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 10-ந் தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் (தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டிய பணியாளர்கள் உள்பட) மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்ட நாளில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு அல்லது 39 வாரங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
ஆன்லைன் மற்றும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களிலும் கோவின் செயலி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலமாக மேலே குறிப்பிட்ட பயனாளிகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெறுவதற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்ட விவரம் ஏற்கனவே வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களில் இணைத்து தரப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானின் பரவல் வேகமெடுத்து வரும் நிலையில் இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி ஜனவரி 3-ந்தேதி முதல் போடப்படும். அதேபோல் ஜனவரி 10-ந் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி கடந்த 26-ந் தேதி அறிவித்தார்.
அதன்படி தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் செய்து வந்தன. இதுதொடர்பாக முன்பதிவு செய்து கொள்வது குறித்தும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் நலவழித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசின் சுகாதாரம் மற்றும் நலவழித்துறை சார்பில் வருகிற 3-ந் தேதியில் இருந்து 15 முதல் 18 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்-சிறுமிகளுக்கும் (அதாவது 2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களுக்கு) கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தப்பட உள்ளது.
தடுப்பூசி போட ஆன்லைன் அல்லது தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் முன்பதிவு செய்யலாம். இதற்காக கோவின் செயலி ஏற்கனவே உள்ள கணக்கு மூலம் சுயபதிவு செய்யலாம். அல்லது செல்போன் எண்ணை கொண்டு புதிய கணக்கை உருவாக்கியும் பதிவு செய்யலாம். நேரடியாக தடுப்பூசி போட செல்லும்போது அங்குள்ள சரி பார்ப்பவர்கள், தடுப்பூசி போடுபவர் மூலம் ஆன்சைட்டிலும் பதிவு செய்யலாம்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 10-ந் தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் (தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டிய பணியாளர்கள் உள்பட) மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்ட நாளில் இருந்து 9 மாதங்களுக்கு பிறகு அல்லது 39 வாரங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
ஆன்லைன் மற்றும் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களிலும் கோவின் செயலி மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயலி மூலமாக மேலே குறிப்பிட்ட பயனாளிகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெறுவதற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்ட விவரம் ஏற்கனவே வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களில் இணைத்து தரப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.