உள்ளூர் செய்திகள்
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்- சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
உலகம் முழுவதும் உருமாறிய வைரஸ் கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவத்தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேளிக்கை நிகழ்ச்சிகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் புதுவையில் கல்லூரி மாணவி மற்றும் முதியோர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதற்கிடையே புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடைவிதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளரும், கரிக்கலாம்பாக்கம் முன்னாள் பஞ்சாயத்தலைவருமான ஜெகநாதன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஜெகநாதன் சார்பில் அவரது வக்கீல் ஸ்ரீதரன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அண்டை மாநிலமான தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
உலகம் முழுவதும் உருமாறிய வைரஸ் கொரோனாவான ஒமைக்ரான் தொற்று பரவத்தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேளிக்கை நிகழ்ச்சிகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் புதுவையில் கல்லூரி மாணவி மற்றும் முதியோர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதற்கிடையே புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடைவிதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளரும், கரிக்கலாம்பாக்கம் முன்னாள் பஞ்சாயத்தலைவருமான ஜெகநாதன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஜெகநாதன் சார்பில் அவரது வக்கீல் ஸ்ரீதரன் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அண்டை மாநிலமான தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீது இன்று பிற்பகல் விசாரணை நடத்துவதாக நீதிபதிகள் வைத்தியநாதன், பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர். விசாரணையின் போது புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? என்பது தெரியவரும்.
இதையும் படியுங்கள்... கோவாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு பிரமாண்ட சிலை