உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் 48,530 பேருக்கு தடுப்பூசி
விருதுநகர் மாவட்டத்தில் 15-வது மெகா தடுப்பூசி முகாம் 661 மையங்களில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் 15-வது மெகா தடுப்பூசி முகாம் 661 மையங்களில் நடைபெற்றது. இதில் 18,437 பேருக்கு முதல் தவணைத்தடுப்பூசியும், 30,093 பேருக்கு 2-வது தவணைதடுப்பூசியும் ஆக மொத்தம் 48,530 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் 21 லட்சத்து 77 ஆயிரத்து 927 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.