உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனப்பட்டி தெருவை சேர்ந்த காஜாமைதீன் (வயது 49) என்பவர் ஆத்துகடைத்தெருவில் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டு இருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டு மற்றும் லாட்டரி விற்ற ரூ.700-ம் பறிமுதல் செய்தனர்.