உள்ளூர் செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில், ஸ்டார் விற்பனை மும்முரம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில், ஸ்டார் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
புதுச்சேரி:
கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா நகரமான புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு படையெடுக்கின்றனர். இதனால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் நிரம்பி உள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால், பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை செய்ய மிஷன் வீதி, காந்திவீதி, நேருவீதி உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. குடில்கள் அமைக்க தேவையான பொருட்கள், ஏசுகிறிஸ்து சிலை, பொம்மைகள், அலங்கார பல்புகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் புதுவையில் வெளியூர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது.
கடற்கரை சாலையில் தலைமை செயலகம் முதல் பழைய துறைமுக பாலம் வரை உள்ள செயற்கை மணல் பரப்பில் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். நோணாங்குப்பம் படகுகுழாமில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் படகில் சவாரி செய்து, பாரடைஸ் பீச்சுக்கு சென்றனர். மேலும் அங்குள்ள மணல் பரப்பில் 4 சக்கர வாகனத்தில் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா நகரமான புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு படையெடுக்கின்றனர். இதனால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் நிரம்பி உள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால், பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை செய்ய மிஷன் வீதி, காந்திவீதி, நேருவீதி உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. குடில்கள் அமைக்க தேவையான பொருட்கள், ஏசுகிறிஸ்து சிலை, பொம்மைகள், அலங்கார பல்புகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் புதுவையில் வெளியூர் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது.
கடற்கரை சாலையில் தலைமை செயலகம் முதல் பழைய துறைமுக பாலம் வரை உள்ள செயற்கை மணல் பரப்பில் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். நோணாங்குப்பம் படகுகுழாமில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் படகில் சவாரி செய்து, பாரடைஸ் பீச்சுக்கு சென்றனர். மேலும் அங்குள்ள மணல் பரப்பில் 4 சக்கர வாகனத்தில் உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர்.