உள்ளூர் செய்திகள்
வனத்துறை ஊழியர்கள் பாம்பை பிடித்த காட்சி

புதுவை சட்டசபை வளாகத்தில் நுழைந்த 4½ அடி சாரை பாம்பு

Published On 2021-12-19 14:02 IST   |   Update On 2021-12-19 14:02:00 IST
புதுவை சட்டசபை வளாகத்தில் நுழைந்த 4½ அடி சாரை பாம்பை வனத்துறையினர் பிடித்து ஒரு பையில் போட்டு எடுத்து சென்றனர்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபை வளாகத்தில் வழக்கம் போல் காவலர்கள் பணியில் இருந்தனர். அப்போது ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதை சட்டசபை காவலர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சட்டமன்ற மார்‌ஷல் ரமேஷ் மூலம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனதுறை ஊழியர்கள் சக்திவேல், கோபி ஆகியோர் சட்டசபை வளாகம் வந்து பாம்பை தேடினர்.

உணவு அருந்தும் மேஜை பகுதியில் மறைந்திருந்த பாம்பை கண்டுபிடித்தனர். பின்னர் அதனை லாவகமாக பிடித்தனர். பிடிப்பட்ட பாம்பு சுமார் 4½ அடி நீளமுள்ள சாரை பாம்பாகும். இதனை ஒரு பையில் போட்டு வனத்துறைக்கு எடுத்து சென்றனர்.

சட்டசபை வளாகத்திற்கு எதிரே பாரதி பூங்கா உள்ளது. பூங்காவில் புல்தரையும், மரங்களும், புதர்களும் உள்ளது. இங்கு இருந்து சட்டசபை வளாகத்திற்குள் பாம்பு வந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். 

Similar News