உள்ளூர் செய்திகள்
தற்கொலை

சாத்தூர் அருகே பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2021-12-18 16:01 IST   |   Update On 2021-12-18 16:01:00 IST
சாத்தூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 51), இவரது மகள் துரைசெல்வி (28). இவர் கணவருடன் மாயூர்நாதபுரத்தில் வசித்து வந்துள்ளார். இதில் துரைசெல்வி குடும்ப பிரச்சினை காரணமாக தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் உடல் கருகிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சுந்தரராஜ் கொடுத்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News