உள்ளூர் செய்திகள்
மரணம்

சாத்தூர் அருகே இளம்பெண் தீக்குளித்து பலி

Published On 2021-12-17 15:44 IST   |   Update On 2021-12-17 15:44:00 IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வயிற்று வலி காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மாயூரநாதர்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி துரை செல்வி (வயது28). இவர்களுக்கு விசித்ரா என்ற 8 வயதில் மகள் உள்ளார்.

துரைச்செல்வி நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி தாங்க முடியாத காரணத்தால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்து தீயை அணைத்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை துரை செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News