உள்ளூர் செய்திகள்
வட்டாட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம்- மாற்றுத்திறனாளிகள் 40 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்:
மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.3000 வழங்கவும், கடுமையான ஊனமுற்றோருக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்கக் கோரி ராஜபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.
நகர தலைவர் சரவணன் தலைமையில் மாவட்ட பொருளாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணி, நகர செயலாளர் பாக்கியராஜ், நகர பொருளாளர் வீரமணி, ஒன்றிய செயலாளர் கணேசன் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
முற்றுகைப் போராட்டம் நடத்திய 40 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.3000 வழங்கவும், கடுமையான ஊனமுற்றோருக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்கக் கோரி ராஜபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.
நகர தலைவர் சரவணன் தலைமையில் மாவட்ட பொருளாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணி, நகர செயலாளர் பாக்கியராஜ், நகர பொருளாளர் வீரமணி, ஒன்றிய செயலாளர் கணேசன் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
முற்றுகைப் போராட்டம் நடத்திய 40 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.