உள்ளூர் செய்திகள்
விருதுநகர் அருகே விபத்தில் போலீஸ் ஏட்டு பலி
விருதுநகர் அருகே நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 36). இவர் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் தனி பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
நேற்று இரவு செல்வகுமார் வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
குண்டாயிருப்பு பகுதியில் சென்றபோது ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் செல்வகுமார் தூக்கி வீசப்பட்டார். படுகாயங்களுடன் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 36). இவர் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் தனி பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
நேற்று இரவு செல்வகுமார் வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
குண்டாயிருப்பு பகுதியில் சென்றபோது ரோட்டோரத்தில் நின்றிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் செல்வகுமார் தூக்கி வீசப்பட்டார். படுகாயங்களுடன் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.