உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு பள்ளிகள் வரும் திங்கட்கிழமை திறப்பு
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அரசு உத்தரவிட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நவம்பர் 8-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் வரும் 6-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும். மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும் என கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் இன்று 711 பேருக்கு கொரோனா பாதிப்பு