உள்ளூர் செய்திகள்
தடுப்பூசி போட மறுத்து சாமியாடிய மூதாட்டி.

கொரோனா தடுப்பூசி போட மறுத்து சாமியாடிய மூதாட்டி- சமூக வலைதளத்தில் வைரலாகிறது

Published On 2021-12-02 02:43 GMT   |   Update On 2021-12-02 02:43 GMT
கொரோனா தடுப்பூசி போட மறுத்து மூதாட்டி சாமியாடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
புதுச்சேரி:

புதுவையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் தட்சிணாமூர்த்தி நகரில் சுகாதார ஊழியர்கள் ஊசி போடாதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர்.

அப்போது ஒரு குடிசை வீட்டில் வசிக்கும் முதியவரும், மூதாட்டியும் ஊசி போடாமல் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை ஊழியர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆனால் ஊசி போடமாட்டோம் என்று அந்த வயதான தம்பதியினர் அடம்பிடித்தனர். தொடர்ந்து சுகாதாரத்துறையினர் ஊசி போடுவதால் எதுவும் ஆகாது என்று கூறி அவர்களிடம் விளக்கினார்கள்.

ஒருகட்டத்தில் அந்த மூதாட்டி சாமி வந்ததுபோல் ஆட தொடங்கினார். கால்களில் அணிந்திருந்த செருப்பை கழற்றிவிட்டு, தாளாது, இது தாளாது அங்காளம்மா சொல்றா என்று சத்தம் போட்டபடி அந்த மூதாட்டி இது ரங்கசாமிக்கு தெரியாதா? என்றெல்லாம் கூறி சாமியாடினார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டே சுகாதார ஊழியர்கள் அங்கிருந்து இடத்தை காலி செய்தனர்.

இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News