உள்ளூர் செய்திகள்
சிவகாசி அருகே அனுமதியின்றி பெட்ரோல் விற்றவர் கைது
சிவகாசி அருகே அனுமதியின்றி பெட்ரோல் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் காக்கிவாடன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபு (வயது 41) என்பவர் தனது பெட்டிக்கடையில் பெட்ரோலை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் பெட்ரோலை போலீசார் பறிமுதல் செய்து பிரபுவை கைது செய்தனர்.