செய்திகள்
விழுப்புரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் சிவக்குமார், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கடலூரில் பணியாற்றி வரும் சங்கத்தின் மாநில தலைவர் சரவணனை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், அந்த உத்தரவை ரத்து செய்து உடனே அவரை பணியில் சேர்க்க வலியுறுத்தியும், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் கணேஷ், முருகன், மணிகண்டன், ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.