செய்திகள்
வெள்ளிச்சந்தை அருகே திருமணமான 2 மாதத்தில் தோழியுடன் மாயமான புதுப்பெண்
வெள்ளிச்சந்தை அருகே திருமணமான 2 மாதத்தில் தோழியுடன் புதுப்பெண் மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே ஆசாரிவிளை காலனியை சேர்ந்தவர் ரேணுகா. இவரது மகள் மார்க்ரெட் ஜெரின் (வயது 21.) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் மார்க்ரெட் ஜெரின். அவரது தோழி அதே பகுதியை சேர்ந்த ஆஷிகா (18) என்பவருடன் சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எங்கும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து மார்க்ரெட் ஜெரின் தாயார் ரேணுகா கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றார்.
வெள்ளிச்சந்தை அருகே ஆசாரிவிளை காலனியை சேர்ந்தவர் ரேணுகா. இவரது மகள் மார்க்ரெட் ஜெரின் (வயது 21.) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் மார்க்ரெட் ஜெரின். அவரது தோழி அதே பகுதியை சேர்ந்த ஆஷிகா (18) என்பவருடன் சம்பவத்தன்று கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எங்கும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து மார்க்ரெட் ஜெரின் தாயார் ரேணுகா கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றார்.