செய்திகள்
விபத்து

ஆலங்குளத்தில் கார் மோதி வாலிபர் பலி

Published On 2021-11-13 11:37 GMT   |   Update On 2021-11-13 11:37 GMT
ஆலங்குளத்தில் சகோதரி திருமணத்திற்கு வந்தவரை வழியனுப்பிவிட்டு வந்த வாலிபர் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு கரும்பனூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 23). இவர் ஆலங்குளத்தில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது சகோதரி திருமணத்திற்கு வந்த நண்பர் ஒருவரை ஆலங்குளம் பஸ் நிலையத்தில் நேற்று இரவு விட்டு விட்டு தனது மோட்டார் சைக்கிளில் தெற்கு கரும்பனூர் திரும்பி உள்ளார்.

ஆலங்குளம்- தென்காசி சாலை மலைக்கோவில் அருகே வந்த போது தென்காசியில் இருந்து செய்துங்கநல்லூர் சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் படுகாயமடைந்து மதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான செய்துங்கநல்லூரை சேர்ந்த சரவணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News