செய்திகள்
கொள்ளை

ஜோலார்பேட்டை அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

Published On 2021-11-09 11:04 GMT   |   Update On 2021-11-09 11:04 GMT
ஜோலார்பேட்டை அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த வெங்கடரெட்டி தெருவைச் சேர்ந்தவர் மீனா (வயது 44). இவருக்கு கனிமொழி (23) தனலட்சுமி (21) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் சென்னையில் பணியாற்றி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு இருவரும் வந்துள்ளனர். இவர்களுடன் தோழியான பிரியா என்பவரும் வந்துள்ளார். பின்னர் பண்டிகை முடிந்து 3 பேரும் சென்னைக்கு செல்வதற்காக இன்று அதிகாலை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்றனர்.

வழியனுப்புவதற்காக வீட்டைப் பூட்டாமலேயே இவர்களுடன் மீனா சென்றார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டினுள் புகுந்து பீரோவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.

பின்னர் வீடு திரும்பிய மீனா பீரோ உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் வைத்து இருந்த நகை - பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News