செய்திகள்
பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 2 வாலிபர்கள் பலி
பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகர்கோவில்:
அழகியபாண்டியபுரம் பெருந்தலைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மசாமி. இவரது மகன் விஜின்ராஜ் (வயது 20).
அதே பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் (17). இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் திட்டு விளையில் இருந்து அழகிய பாண்டியபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விஜின்ராஜ் ஓட்டினார்.
கடுக்கரை விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த கீரிப்பாறை பரளியாறு பகுதியைச் சேர்ந்த ரெஜிஸ் குமார் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இரு மோட்டார் சைக்கிள்களும் மோதியதில் விஜின்ராஜ், எட்வின், ரெஜிஸ்குமார் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி எட்வின், விஜின்ராஜ் இருவரும் பரிதாபமாக இறந்தனர். ரெஜிஸ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து பூதப்பாண்டி போலீசில் எட்வினின் தாயார் எஸ்தர் ராணி புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் தளவாய்புரம் ஜோஸ் காலனியைச் சேர்ந்தவர் அமலதாஸ் (40). ஆட்டோ டிரைவர். இவர், நேற்றிரவு ஆட்டோவிற்கு பெட்ரோல் போடுவதற்காக தம்மத்து கோணம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு ஆட்டோ ஒன்று அமலதாஸ் ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோவின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அமலதாஸ் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமலதாஸ் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அழகியபாண்டியபுரம் பெருந்தலைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மசாமி. இவரது மகன் விஜின்ராஜ் (வயது 20).
அதே பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் (17). இவர்கள் இருவரும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் திட்டு விளையில் இருந்து அழகிய பாண்டியபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விஜின்ராஜ் ஓட்டினார்.
கடுக்கரை விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த கீரிப்பாறை பரளியாறு பகுதியைச் சேர்ந்த ரெஜிஸ் குமார் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இரு மோட்டார் சைக்கிள்களும் மோதியதில் விஜின்ராஜ், எட்வின், ரெஜிஸ்குமார் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி எட்வின், விஜின்ராஜ் இருவரும் பரிதாபமாக இறந்தனர். ரெஜிஸ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து பூதப்பாண்டி போலீசில் எட்வினின் தாயார் எஸ்தர் ராணி புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் தளவாய்புரம் ஜோஸ் காலனியைச் சேர்ந்தவர் அமலதாஸ் (40). ஆட்டோ டிரைவர். இவர், நேற்றிரவு ஆட்டோவிற்கு பெட்ரோல் போடுவதற்காக தம்மத்து கோணம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு ஆட்டோ ஒன்று அமலதாஸ் ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோவின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அமலதாஸ் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அமலதாஸ் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.