செய்திகள்
கோப்புபடம்

குன்னத்தூர் அருகே இளம்பெண் மாயம்

Published On 2021-11-03 08:47 GMT   |   Update On 2021-11-03 08:47 GMT
மோனிசாவிடம் கேட்ட போது தீனா ஆண் நண்பருடன் சென்று உள்ளதாக கூறினார்.
குன்னத்தூர்:

குன்னத்தூர் அருகேஆதியூரை சேர்ந்த தீபா-சாமிநாதன் தம்பதி மகள் தீனா (வயது 17). கடந்த 2 நாட்களுக்கு முன் டெய்லர் கடைக்கு சென்று வருவதாக தனது நண்பர் மோனிஷாவுடன் குன்னத்தூர் சென்றுள்ளார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இதுபற்றி  மோனிசாவிடம் கேட்ட போது  ஆண் நண்பருடன் சென்று உள்ளதாக கூறினார். இதுபற்றி தீனாவின் பெற்றோர்கள் குன்னத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக்கொண்ட குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா வழக்குப்பதிவு தீனாவை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News