செய்திகள்
விபத்து

வத்திராயிருப்பு அருகே கார் விபத்தில் போலீஸ்காரர் மரணம்

Published On 2021-11-01 09:13 GMT   |   Update On 2021-11-01 09:13 GMT
வத்திராயிருப்பு அருகே காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40). இவர் கோவை மாநகர ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த பன்னீர்செல்வம் மனைவி ராஜலட்சுமி(35), மகள் ஜெசிகா ஆகியோருடன் காரில் நேற்று தம்பிபட்டி கோட்டையூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு ஆட்டோ வந்தது.

அந்த ஆட்டோவில் வேல்முருகன் என்பவர் குடும்பத்தினருடன் ஜவுளி எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் போலீஸ்காரர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி ராஜலட்சுமி, மகள் ஜெசிகா, வேல்முருகன் அவரது மனைவி பிரியா (30) குழந்தைகள் விசுவாஸ், வைசியா மற்றும் மணிகண்டன் ஆகியோர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வத்திராயிருப்பு போலீசார் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பலத்த காயமடைந்த வேல்முருகன், ராஜலட்சுமி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News