செய்திகள்
சேத்துப்பட்டில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
சேத்துப்பட்டில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், முருகன் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ்காரர்களை பார்த்ததும் சேத்துப்பட்டு பழம்பேட்டையைச் சேர்ந்த செல்வகணேஷ் (வயது 40) என்பவர் தப்பி செல்ல முயன்றார்.
அவரை, போலீசார் மடக்கி விசாரித்தபோது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக கூறினார். இதையடுத்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள் 20, ரூ.1000-த்தை பறிமுதல் செய்தனர்.