செய்திகள்
வாலாஜா அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி
வாலாஜா அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த தேவதானம் ஏரியில் ஆண் பிணம் மிதந்த இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்த பிணத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் வாலாஜா அடுத்த திருமலைச்சேரி கிராமத்தை சேர்ந்த நாகராஜன் (40) கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.