செய்திகள்
உயிரிழப்பு

கூலி தொழிலாளி வி‌ஷம் குடித்து உயிரிழப்பு- போலீசார் விசாரணை

Published On 2021-10-16 10:41 GMT   |   Update On 2021-10-16 10:41 GMT
செய்யாறு அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
செய்யாறு:

வெம்பாக்கம் அடுத்த நாட்டேரி கிராம காலனியில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 48). கூலி தொழிலாளியாக இவருடைய மனைவி மணிமேகலை கடந்த 2 வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.

முருகேசனும் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

மனவேதனையில் இருந்த முருகேசன் நேற்று முன்தினம் பயிருக்கு அடிக்கும் பூச்சி மருந்து சாப்பிட்டு விட்டு மயங்கி கிடந்தார்.

மயங்கி கிடந்த முருகேசனை அவரது மகள் சரஸ்வதி செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். சிகிச்சை பலனளிக்காமல் முருகேசன் இறந்துவிட்டார்.

இதுகுறித்து முருகேசன் மகன் சந்தோஷ் பிரம்மதேசம் போலீசில் புகார் கொடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News