செய்திகள்
மீன்சுருட்டி அருகே மது விற்றவர் கைது
மீன்சுருட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மீன்சுருட்டி அருகே உள்ள நரசிங்கபாளையம் மேலத்தெருவை சேர்ந்த சாமிநாதன்(வயது 55) என்பவர், நரசிங்கபாளையம் அருகே உள்ள இடப்பள்ளம் என்ற இடத்தில் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து சாமிநாதனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.