செய்திகள்
தற்கொலை

செந்துறை அருகே தூக்கமின்மை நோயால் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை

Published On 2021-10-01 14:43 IST   |   Update On 2021-10-01 14:43:00 IST
செந்துறை அருகே வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் ராஜா(வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அவர் தனது தந்தையின் கார் மற்றும் பொக்லைன் எந்திரங்களை பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இரவில் தூக்கமின்றி அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்து வந்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வெளியே சென்ற அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் தேடியபோது, அவரது மாமனார் வீட்டிற்கு பின்புறம் உள்ள கிணற்றுமேட்டில் அவரது செல்போன் மற்றும் செருப்புகள் இருந்ததை கண்டனர். இதையடுத்து அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்.

இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூக்கமின்மை நோயால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News