செய்திகள்
ஆற்காடு அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை
ஆற்காடு அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (வயது35) கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவி, 2 மகள் உள்ளனர்.
புதிய தெரு வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் சரிதா (34)கட்டிட தொழிலாளி. இவருக்கும் திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
வேலை செய்யும் இடத்தில் பாரதிக்கும், சரிதாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். உறவினர்களுக்கு இவர்களது தொடர்பு தெரியவந்தது. இதனால் அவர்களை கண்டித்தனர்.
இந்த நிலையில் சரிதாவும், பாரதியும் வெள்ளக்குளம் பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடலையும் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆற்காடு அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (வயது35) கட்டிட மேஸ்திரி. இவருக்கு மனைவி, 2 மகள் உள்ளனர்.
புதிய தெரு வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் சரிதா (34)கட்டிட தொழிலாளி. இவருக்கும் திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
வேலை செய்யும் இடத்தில் பாரதிக்கும், சரிதாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். உறவினர்களுக்கு இவர்களது தொடர்பு தெரியவந்தது. இதனால் அவர்களை கண்டித்தனர்.
இந்த நிலையில் சரிதாவும், பாரதியும் வெள்ளக்குளம் பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடலையும் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.