செய்திகள்
பட்டாசு தயாரிக்கும் பணி

குருவிநத்தம் கிராமத்தில் தீபாவளி பட்டாசு தயாரிக்கும் பணி மும்முரம்

Published On 2021-09-20 02:51 GMT   |   Update On 2021-09-20 02:51 GMT
பட்டாசுகளை பற்ற வைக்கும் திரி தயாரித்து உலர வைக்கும் பணியில் குருவிநத்தம் கிராம மக்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாகூர்:

தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு, புத்தாடை, இனிப்பு வகைகள் தான். இந்த ஆண்டு வருகிற நவம்பர் மாதம் 4 தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக பட்டாசு ஆலைகள், ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் தங்களது தயாரிப்புகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

புதுவை மாநிலம் பாகூர் அருகே குருவிநத்தம் கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு குடிசை தொழிலாக காலம் காலமாக நடைபெற்று வருகிறது. வெளியூர்களில் இருந்து மூலப்பொருட்கள் வாங்கி வந்து, பட்டாசு தயாரிக்கப்படுகிறது. பட்டாசுகளை பற்ற வைக்கும் திரி தயாரித்து உலர வைக்கும் பணியில் கிராம மக்கள் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த திரி பட்டாசுகளில் இணைத்து விற்பனைக்காக பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும்.
Tags:    

Similar News