செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவையில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

Published On 2021-09-15 11:14 GMT   |   Update On 2021-09-15 11:14 GMT
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 338 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று 5 ஆயிரத்து 345 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

புதிதாக 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 87, காரைக்காலில் 29, ஏனாமில் 4, மாகியில் 4 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் 108, காரைக்காலில் 31, ஏனாமில் 12, மாகியில் 19 பேர் என 170 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 52, காரைக்காலில் 23, மாகியில் 5 பேர் என 80 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 338 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுவையில் 467, காரைக்காலில் 184, ஏனாமில் 18, மாகியில் 61 பேர் என 730 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 900 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.

புதுவையில் 2 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது.

புதுவையில் 2-வது தவணை உட்பட 8 லட்சத்து 77 ஆயிரத்து 120 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுவை மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மற்றும் பலியும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News